பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்

by Editor / 16-11-2022 07:15:11am
பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை, ரூ.25  ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி அவரிடமிருந்து நகையை பறித்த வழக்கில் சேர்வீட்டை சேர்ந்த வீராச்சாமி (45), பெரியமலையூரை சேர்ந்த சங்கர் (40) ஆகிய இருவரை நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் சார்பு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிகள் வீராச்சாமி, சங்கர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினர்

 

Tags :

Share via