தமிழகத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையினால் தான் ஊழல்கள் அதிகரித்துள்ளது -டாக்டர் கிருஷ்ணசாமி.

by Staff / 25-09-2025 11:23:37pm
தமிழகத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையினால் தான் ஊழல்கள் அதிகரித்துள்ளது -டாக்டர் கிருஷ்ணசாமி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர் மாவட்டங்களை மட்டுமே மையமாகக் கொண்டு துவங்கப்படுகின்றன ,
இதேபோன்று தென் மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் வரவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

சில தொழிற்சாலைகள் தூத்துக்குடி,  திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதிக்கு வருகின்றன.
வறட்சி மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் போது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான நோக்கம். 


ஆனால் தூத்துக்குடியில் மாவட்டத்தில் அண்மையில் வின் ஃபாஸ்ட் என்ற கார் நிறுவன தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது,அதே போல் சில தொழிற்சாலைகள் தொடங்கபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் கட்டுமான பணிகளுக்கு உள்ளூர் மக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் தவிர , தொழிற்சாலைகள் தொடங்கிய பிறகு குறிப்பாக நிர்வாக ரீதியான பணிகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை மறுக்கின்றனர். 


திமுக தேர்தல் அறிக்கையில் பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கப்படும் போது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.ஆனால் இன்றுவரை அந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. எனவே எந்த தொழிற்சாலைகள் தொடங்கினாலும் சமூக நீதி அடிப்படையில் முதலில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்,
உள்ளூர் மக்களுக்கு நல்ல பதவிகள் கொடுத்து அவர்களை உயர்த்தி விட வேண்டும். 

அமெரிக்காவில் உள்ளூர் மக்களை பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.
நம்ம நாட்டில் குறைந்தபட்சம் வேலைவாய்ப்பு கூட அவர்களுக்கு முன்னுரிமை இல்லாமல் தொழிற்சாலைகள் இங்கு வந்து எவ்வித பலனும் கிடையாது.

தொழிற்சாலைகள் தொடங்கும் போது உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டத்தினை திமுக கொடுக்க வாக்குறுதியின் படி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் உப்பளங்கள் என்ற பெயரில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. 

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச் சொல்லுக்கு பாதிப்பு என்று கூறி தான் அவ்வளவு பெரிய ஆலை மூடப்பட்டது.ஆனால் தூத்துக்குடி அருகே மீன் கழிவு ஆலை, நெல்லை துறையூரில் கெமிக்கல் ஆலை போன்றவற்றினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது .

தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்திற்கு மாறாக கட்டிடம் கட்ட மூட்டை தூக்க மட்டும் உள்ளூர் மக்களும் மற்ற உயர் பணிகளுக்கு வெளி மாநிலத்திலிருந்து ஆட்களை கொண்டு வந்து விடுகின்றனர்.

எனவே புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில்  அடுத்த மாதம் 7ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகன பேரணி மற்றும் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது 

மத்தியில் ஆளும் பாஜக கடந்த காலங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்கள்,ஒரு கட்சி ஆட்சி முறையினால்  தமிழகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கும், ஊழல்களுக்கும் கனிமவளக் கொள்ளைகளுக்கும் வேலையில்லா திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் இந்த ஒரு கட்சி ஆட்சிமுறை தான் காரணம். 

தமிழகத்தில் இந்த ஒரு கட்சி ஆட்சி முறைக்கு 2026 இல் நிச்சயமாக ஏற்பட்டு தீரும்,
தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பும் சிந்தனையும் கூட்டணி கட்சி ஆட்சி முறைதான்.
2026ல் தனியாக ஒரு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கான காலம் தான் 2026ல் கனிந்து வருவதாக கருதுகிறேன் 

திமுக அதிமுக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால் யார் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்கிறார்களோ  அவர்கள் தான் 2026ல் முன்னிலை வகிப்பார்கள்,கூட்டணி ஆட்சியை குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை எதையும் இந்த நிமிடம் வரை நிராகரிக்கவில்லை. 

100நாள் வேலை முப்பது நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.இதற்கெல்லாம் தீர்வு வேண்டுமென்றால் நிச்சயாமாக கூட்டணி ஆட்சி வரணும்,கூட்டணி ஆட்சி குறித்து விஜய்  வெளிப்படையாக பேசுகிறார்.

நேர்மையான மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய ஆட்சி வேண்டும் என்றால் கூட்டணி ஆட்சி தான்.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க கூடிய ஆட்சி தான் தேவை.

அதனை விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சூழ்நிலைகள் எப்படி போகும் என்பது 2026ல் ஜனவரி 7ஆம் தேதி புனிதமிழகம் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டுக்கு பிறகு தான் எங்களுடைய கூட்டணி பற்றி ஒரு நிறைவான இறுதியான முடிவெடுக்க முடியும். 

ஆனால் எதையும் யாரையும் புறந்தள்ள மாட்டோம் . கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதற்கு யார் தயாராக இருந்தாலும் இருந்தாலும் . அதற்கான வாய்ப்புகள் எல்லாத்தையும் நாங்கள் பரிசீலிப்போம், கணக்கில் கொள்வோம். 

மெல்ல மெல்ல தமிழர்களின் வாழ்வாதாரம் வேறு வடிவத்தில் பறிக்கப்படுகிறது,ஒப்பந்தம் அடிப்படையில் என்ற பெயரில் எல்லா தொழில்களும் பறிபோகிறது .அரசு பேருந்து மற்றும் நடத்துனர்கள் கூட ஒப்பந்த அடிப்படையில் விடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக வெற்றி கழகம் குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்புவதால்  நான் பதில் சொல்கிறேன்.
தமிழக வெற்றிக்கழகமும் அல்லது வேறு எந்த கழகமோ பூனை கருப்பா வெள்ளையா என்பது பிரச்சனை இல்லை அது எலி பிடிக்கிறதா என்பது தான் முக்கியம்.தமிழகத்தில் எந்த கட்சி என்று பார்க்க மாட்டோம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வாய்ப்பு இருந்தால் அதனை பரிசீலனை செய்வோம். என்றார்

 

Tags : தமிழகத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையினால் தான் ஊழல்கள் அதிகரித்துள்ளது -டாக்டர் கிருஷ்ணசாமி.

Share via

More stories