தீபாவளியை முன்னிட்டு அக்.5,6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன்பொருட்கள்.
தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்.5) மற்றும் அக். 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதிவைக்க வேண்டும் என தமிழக கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags : தீபாவளியை முன்னிட்டு அக்.5,6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன்பொருட்கள்.



















