கரூர் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார் விஜய்.
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, தனியார் நட்சத்திர விடுதிக்கு விஜய் வந்தடைந்தார். கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்த தவெக கூட்டத்தில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து, அங்கு விஜய் அவர்களை சந்திக்க இருக்கிறார். சரியாக 30 நாட்களுக்குப் பிறகு இன்று விஜய் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறார்.
Tags : கரூர் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார் விஜய்.



















