சென்னை புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வு

by Editor / 02-09-2021 08:25:08pm
சென்னை புறநகர் ரயில்களில்  நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வு

சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வேதுறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடின்றி பயணிக்காலம். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரிட்டர்ன், சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.டிக்கெட் வாங்கும்போது 2 டோஸ் தடுப்பூசி சான்று, அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் காலை 7 மணி முதல் 9.30, மாலை 4.30 முதல் 7 மணி வரை பயணிக்க கட்டுப்பாடுகள் தொடரும். 

 

Tags :

Share via