சசிகலா விவகாரம் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது.
இதனிடையே சசிகலா மீண்டும் அரசியலில் வருவதாக அவ்வப்போது ஆடியோ வெளியிட்டு வருகிறார். இவரது ஆடியோ விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் மீண்டும் அதிமுகவை மீட்டு எடுப்பேன் எனவும், தலைமை பொறுப்பை ஏற்று நடத்துவேன் எனவும் கூறி வருகின்றார்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் .சசிகலா விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags :