ரஷ்ய ராணுவ உளவு அமைப்பு துணைத் தலைவர் சுடப்பட்டார்
ரஷ்ய ராணுவ உளவு அமைப்பு துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மாஸ்கோவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சுடப்பட்டார்.மாஸ்கோவின் வடமேற்கில் உள்ள வோலோகொலம்ஸ்கோயே நெடுஞ்சாலையில் உணவு விநியோகம் செய்யும் நபர் போல வேடமணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.அலெக்ஸீவ் கை, கால் மற்றும் மார்புப் பகுதிகளில் சுடப்பட்டு பலத்த காயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தை ஒரு பயங்கரவாத செயல் என்று வர்ணித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இதற்கு உக்ரைனே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அலெக்ஸீவ் 2023-ல் வாக்னர் குழுவின் கிளர்ச்சியின் போது பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் ஒருவர். மேலும், உக்ரைனுடனான தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்யா கருதுகிறது.இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது ரஷ்யாவிற்குள் நடக்கும் உள்நாட்டு மோதலாக இருக்கலாம் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் புலனாய்வுக் குழு இது தொடர்பாக விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Tags :


















