ஈரான் நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதிக்கு கூடுதலாக ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஈரான் அதிகாரிகள் சமீபத்தில் நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதிக்கு கூடுதலாக ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளனர். 53 வயதான நர்கஸ் முகமதிக்கு "கூட்டுச் சதி" செய்ததற்காக 6 ஆண்டுகளும், அரசுக்கு எதிராக "பரப்புரை" செய்ததற்காக 1.5 ஆண்டுகளும் என மொத்தம் 7.5 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 2 ஆண்டுகள் வெளிநாடு செல்லத் தடையும், 2 ஆண்டுகள் உள்நாட்டு நாடுகடத்தலும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் சீர்திருத்தவாத முன்னணியின் தலைவரான ஆசர் மன்சூரி மற்றும் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் மொஹ்சென் அமின்சாதே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ஈரானில் நடந்த நாடு தழுவிய போராட்டங்கள் குறித்த அரசின் அடக்குமுறையைக் கடுமையாக விமர்சித்ததற்காகவும், "தேசிய பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்டதற்காகவும்" இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மஷாத் நகரில் ஒரு நினைவுச் சடங்கில் பங்கேற்றதற்காக டிசம்பரில் கைது செய்யப்பட்ட முகமதி, சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
Tags :


















