ஆஸ்திரேலியாவின் மிக உயரிய ராணுவ விருதான விக்டோரியா கிராஸ் பெற்ற ஓய்வுபெற்ற வீரர் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் கைது
ஆஸ்திரேலியாவின் மிக உயரிய ராணுவ விருதான விக்டோரியா கிராஸ் பெற்ற ஓய்வுபெற்ற வீரர் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் ஆப்கானிஸ்தான் போரின் போது பொதுமக்களைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 7 அன்று சிட்னி விமான நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.
2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த ஐந்து கொலைகள் தொடர்பாக இவர் மீது போர்க்குற்றக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பிடிபட்ட மற்றும் நிராயுதபாணியான பொதுமக்களைக் கொலை செய்தல் அல்லது அத்தகைய கொலைகளுக்கு உத்தரவிடுதல் போன்றவை இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும். முன்னதாக, தன் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றக் குற்றச்சாட்டுகள் தவறானவை எனக்கூறி ஊடகங்கள் மீது இவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த விசாரணையில் இவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் வழக்கை 2023-ல் தள்ளுபடி செய்தது.இந்தப் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு ஆஸ்திரேலிய சட்டப்படி ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
Tags :


















