பள்ளிகள் திறந்தவுடன் காலை உணவுத்திட்டம் அமல் முதலமைச்சர் விஜய்
முந்தைய திமுக அரசால் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த காலை உணவுத்திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த பின் முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைப்பார் என தெரிகிறது.
Tags :



















