தடை செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
பழைய 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், தடை செய்யப்பட்டு புழக்கத்தில் இல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாகக் கூறி மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் பணத்தை பறித்துவிட்டு தப்பி செல்வது தொடர்ந்துள்ளது. இதனையடுத்து மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு கார்களில் வந்த ஆசாமிகள் வங்கிக்கு பணம் செலுத்தப் போவதாக கூறியுள்ளனர்.
அந்த இரண்டு கார்களையும் போலீசார் சோதனை செய்தபோது பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
Tags :