கார் மோதி விபத்து 3 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்திர், பைக்கில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். திருப்புல்லாணி பகுதியை சேர்ந்த மாடசாமி, அவரது மகள் பஞ்சவர்ணம் மற்றும் அவரது மருமகன் புல்லாணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
Tags :


















