மருத்துவ மாணவர் தற்கொலை

by Editor / 17-09-2021 06:50:19pm
மருத்துவ மாணவர் தற்கொலை

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி ரஞ்சித்குமார் என்ற மாணவர் இளநிலை மருத்துவம் பயின்று வந்தார் . இந்நிலையில் நேற்று இரவு ரஞ்சித்குமாரின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது .

இதனால் சந்தேகமடைந்த விடுதி மாணவர்கள் அவரது அறையின் பின்பக்க ஜன்னலைத் திறந்து பார்த்தனர் . அப்போது , அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

மாணவர் தற்கொலை குறித்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர் . கடந்த தேர்வில் இரண்டு பாடங்களில் ரஞ்சித்குமார் தோல்வியடைந்துள்ளார் . இவருடன் படித்த மற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக பணிக்குச் செல்ல உள்ளனர் .

இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததால்தான் ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via