கொலைக்கு விரைவில் பழி- போஸ்ட்ரால் பரபரப்பு.

by Editor / 20-09-2021 06:34:29pm
கொலைக்கு விரைவில் பழி- போஸ்ட்ரால் பரபரப்பு.

 

திருச்சி பகுதிகளில் ரவுடி கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதாக மறைமுகமாக போஸ்டர் ஒட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருச்சி, கொல்லம்பட்டு எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் சின்ராசு. இவர் சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். மேலும், பல வழக்குகளில் தொடர்புடையவராக இருந்துள்ளார்.


இந்நிலையில், முன் விரோதம் காரணமாக கடந்த 15 தேதி அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதிகாவல்துறையினர் பாதுக்காப்பில் இருந்தது.இதனை அடுத்து அந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூவரை கைது செய்தது காவல்துறை. இந்நிலையில், சின்னராசுக்கு அடிகப்பட்ட அஞ்சலி போஸ்டரில் விரைவில் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனை அடுத்து இது அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாக காவல்துறையினர் அந்த போஸ்டரை ஒட்டிய 5 பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via