குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை

by Editor / 22-09-2021 09:05:12am
குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தாமல் உள்ளது. 2019ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்ற வந்தன.

இந்நிலையில், குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ் நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த வுள்ளனர். இதில், குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து தேர்வுகளின் தேதி இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

 

Tags :

Share via