256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள் சிக்கியது; 560 ரவுடிகள் கைது
தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் விதமாக நள்ளிரவில் ரவுடிகளின் வீடுகளில் திடீரென போலீசார் சோதனை நடத்தினர். இதில், 256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள் சிக்கியதுடன், 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை, திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, என பல்வேறு மாவட்டங்களில் இந்த ரெய்டு நடந்தது.தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக பல பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீட்டில் நள்ளிரவில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஜிபி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த சோதனையில் ரவுடிகளின் வீட்டில் இருந்த பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில், 256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள் ரவுடிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், சுமார் 560 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
Tags :