கணவனை காரேற்றிகொலைசெய்ய கள்ளக்காதலனை ஏவிய மனைவி.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரம் வேல்துரை இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.மனைவி பேச்சியம்மாள் என்கிற உமா மற்றும் இரு குழந்தைகளுடன் அடைக்கலபட்டணத்தில் உள்ள மெக்கானிக் சுதாகரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். சுதாகர் மனைவி 2 வருடம் முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுதாகர் குழந்தைகளை பேச்சியம்மாள் கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதில் சுதாகர் மற்றும் பேச்சியம்மாள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு உருவாகியுள்ளது.வேல்துரை தினமும் வேலைக்கு செல்லும் பொழுது தனது பைக்கில் பாவூர்சத்திரத்தில் நிறுத்திவிட்டு பேரூந்தில் பணிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.வேல்துரை வேலைக்கு சென்றவுடன் பேச்சியம்மாளும் சுதாகரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். நேற்று திங்கள் கிழமை அதிகாலையில் பணிக்கு செல்வதற்காக தனது பைக்கில் பாவூர்சத்திரம் நோக்கி வேல்துரை நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். பைக் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது பைக்கின் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேல்துரை தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதில் காரை ஒட்டி வந்த நபர் மற்றும் காரில் இருந்த நபர் தப்பி ஓடினர். சம்பவம் அறிந்து விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீசார் உயிரிழந்த வேல்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வேல்துரையின் முகம் கார் மோதியதில் முழுவதுமாக சிதைந்து அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் காரின் நம்பர் பிளேட் இல்லாததால் விபத்து குறித்து சந்தேகமடைந்தனர் . விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை செய்ததில் கார் அடைக்கலபட்டிணம் சேர்ந்த மெக்கானிக் சுதாகரிடம் இருந்ததாக தெரியவந்தது . சம்பவதன்று இந்த காரை ஆறுமுகம் என்பவர் ஒட்டி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 36) என்பவரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். ஆறுமுகத்திடம் விபத்து குறித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது . வேல்துரையின் மனைவி பேச்சியம்மாள்க்கும் அவர் வாடகைக்கு வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் சுதாகருக்கும் இடையில் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும் வேல்துரை கண்டக்டர் பணிக்கு செல்லும் போதெல்லாம் சுதாகரும் பேச்சியம்மாளும் அவ்வப்பொழுது தனிமையில் கள்ளக்காதலை வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதலுக்கு வேல்துரை தடையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் வேல்துரையை தீர்த்து கட்ட சுதாகர் முடிவு செய்தார். மனைவி பேச்சியம்மாள் உதவியுடன் கார் ஏற்றி கொல்ல முடிவு செய்து அதற்கு தனது நண்பரான பூலாங்குளத்தை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் ஆறுமுகம் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.சம்பவதன்று ஆறுமுகம் உதவியுடன் வேல்துரை வேலைக்கு செல்லும் போது அவர் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளதாக கூறபடுகிறது. பைக் மீது கார் இடித்ததில் சாலை ஓரம் இருந்த இரும்பு மின் கம்பம் முற்றிலும் வளைந்து சேதமடைந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக பாவூர்சத்திரம் போலீசார் மெக்கானிக் சுதாகர்,காரை ஒட்டி சென்ற அவரது நண்பர் ஆறுமுகம் மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வேல்துரை மனைவி பேச்சியம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags : கணவனை காரேற்றிகொலைசெய்ய கள்ளக்காதலனை ஏவிய மனைவி.