ஜம்மு-காஷ்மீர் மக்களை பாதுகாப்பதில் மத்திய அரசு தோல்வி: ராகுல்

by Editor / 08-10-2021 10:25:39am
ஜம்மு-காஷ்மீர் மக்களை பாதுகாப்பதில் மத்திய அரசு தோல்வி: ராகுல்

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டினா்ர.இன்று (அக்.07) ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் கூறியது, காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பண மதிப்பிழப்பு, சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படவும் இல்லை; நிறுத்தப்படவும் இல்லை. இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via