மாவோயிஸ்ட் சகோதரர் வீட்டில்.. என்.ஐ .ஏ. அதிகாரிகள்சோதனை

by Editor / 12-10-2021 12:16:00pm
மாவோயிஸ்ட் சகோதரர்  வீட்டில்.. என்.ஐ .ஏ. அதிகாரிகள்சோதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு இவர் மாவோயிஸ்ட் அமைப்பு இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸை தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு அவரிடம் என்.ஐ .ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலின்படி அவரது உறவினர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே காளிதாசரின் சகோதரர் சிங்காரம் என்பவர் சிவகங்கையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை தேசிய புலனாய்வு முகமை பிரிவில் இருந்து 2 அதிகாரிகள் சிவகங்கை வந்துள்ளனர். பிறகு சிவகங்கை போலீசார் உதவியுடன் சிங்கார வீட்டில் சோதனை நடத்திய போது வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் வீட்டிற்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via