விவேக் அஸ்தி மீது மரக்கன்றுகளை நட்டு வைத்த உறவினர்கள்

by Admin / 24-07-2021 10:19:56am
விவேக் அஸ்தி மீது மரக்கன்றுகளை நட்டு வைத்த உறவினர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உறவினர்கள் அஸ்திக்கு மரியாதை செய்த பின் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

அதில் மலர்கள் தூவி மரக்கன்றுகளை அவருடைய உறவினர்கள் நட்டனர். இந்த மரம் விவேக்கின் நினைவாக அந்த கிராமத்தில் இருக்கும் என்றும் அவருடைய உறவினர்கள் நெகழ்ச்சியாக கூறியுள்ளனர். 

விவேக் அஸ்தி மீது மரக்கன்றுகளை நட்டு வைத்த உறவினர்கள்
 

Tags :

Share via