அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

by Editor / 15-11-2021 03:14:36pm
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

 

அடுத்த 3 மணி நேரத்தில்  சென்னை கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில்  சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

அதேபோல் கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via