தனியார் நூற்பாலையில் வடமாநில பெண் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்ட இருவர் கைது.

by Editor / 05-12-2021 06:57:37pm
தனியார் நூற்பாலையில் வடமாநில பெண் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்ட  இருவர் கைது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் ஏராளமான தனியார் நூற்பாலைகள்  செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், சம்பவத்தன்று வேலைக்கு செல்லமுடியாத உடல் உபாதைக்கு ஆட்ப்பட்டு  விடுமுறை எடுத்துள்ளதாக  கூறப்படுகிறது..

இதனால், அந்த பெண் தங்கியிருந்த விடுதியின் வார்டன் லதா மற்றும் மேலாளார் முத்தையா உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் அந்த வடமாநில பெண்ணை கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். 

அந்த பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இந்த சம்பவம் நடைபெற்ற தனியார் ஆலை அடையாளம் காணப்பட்டு இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விடுதி வார்டன் லதா மற்றும் மேலாளர் முத்தையா ஆகிய இருவரை கைதுசெய்து பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏராளமான ஆலைகளில் வடமாநில பெண்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த கிராம பெண்களும் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் நூற்பாலையில் வடமாநில பெண் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்ட  இருவர் கைது.
 

Tags :

Share via