பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது

by Editor / 09-12-2021 06:26:01pm
 பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது

சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார் என்ற புகாரின்பேரில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை யூ டியூபர் மாரிதாஸ் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா.

தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து நீக்கிய நிலையில், மதுரை புதூர் காவல்நிலைய போலீசார், 153 A, 505 ஆகிய பிரிவுகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல், அரசு உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இன்று மதியம்மதுரை  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இருந்தவரை போலீசார் கைது செய்ய  சென்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் வீட்டின் முன்னர் குவிந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு, மாரிதாஸ் கைது செய்யப்பட்டு  புதூர் காவல் நிலையம் அழைத்து செல்லப் பட்டார்.காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலேசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மதுரை புதூர் காவல் நிலையம் முன்பு  பாஜகவினர் குவிந்துள்ளனர்.

 பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது
 

Tags :

Share via