ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவத்தினருக்கு சென்னை காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி

by Editor / 09-12-2021 06:30:55pm
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவத்தினருக்கு சென்னை காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தலைமை தளபதி திரு.பிபின் ராவத், அவரது மனைவி திருமதி.மதுலிகா ராவத் மற்றும்  ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்துகிற நிகழ்ச்சி  சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரி கலந்துகொண்டு திரு.பிபின் ராவத் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள்,மாநில நிர்வாகிகள்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள்,நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
 

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவத்தினருக்கு சென்னை காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி
 

Tags :

Share via