இருமாநில எல்லையில் போலீசார் கூட்டு வாகன சோதனை.

by Editor / 22-12-2021 09:32:42pm
இருமாநில  எல்லையில் போலீசார் கூட்டு வாகன சோதனை.

தமிழக கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை  கோட்டை வாசல் பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட போலீசார் மற்றும் கொட்டாரக்கரை போலீசார் மற்றும் தென்காசி மாவட்ட போலீசார் இணைந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைவஸ்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கூட்டு வாகன சோதனை மேற்கொண்டனர், இந்த சோதனையில் தமிழக போலீசார் மற்றும் கேரள மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை போலீசார் இந்தச் சோதனைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு மாநில எல்லைப்பகுதியான கோட்டை வாசல் பகுதியிலும் ஆரியங்காவு பகுதியிலும் சுமார் 6 மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இருமாநில  எல்லையில் போலீசார் கூட்டு வாகன சோதனை.
 

Tags :

Share via