பாலியல் புகார் சிறுவன்  போக்சோ சட்டத்தில் கைது       

by Editor / 24-07-2021 07:53:15pm
பாலியல் புகார் சிறுவன்  போக்சோ சட்டத்தில் கைது       

 

குமரி மாவட்டம் குளச்சல் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது ஒரு சிறுமி குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சிறுமியின் தம்பி 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். தாயார் அப்பகுதி காய்கறி கடை ஒன்றில் வேலை செய்கிறார் இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி தாய் வழக்கம் போல் காய்கறி கடைக்கு சென்று விட்டார். தந்தை வாக்கிங் செல்ல வெளியே சென்றார். 


அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது தம்பி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே கடந்த மாதம் 21ம் தேதி அந்த சிறுமிக்கு வயிறு  வலி எடுத்தது. உடனே தாயார் சிறுமியை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கும் போது சிறுமி 8 மாதம் கர்ப்பமாகி  இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியின் தம்பி தான் காரணம் என தெரியவந்தது. 
இதையடுத்து சிறுமி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜானகி சிறுமியின் தம்பி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார். போக்சோவில் கைது செய்யப்பட்ட சிறுவன் திருநெல்வேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via