பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் கைது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பூச்சி பட்டியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் பட்டா மாறுதலுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகிய போது பத்திரப்பதிவு வட்டார அலுவலர் காஞ்சனா பட்டா மாறுதலுக்கு ரூபாய் 4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து ரஞ்சித் குமார் மதுரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் பத்திரபதிவு அலுவலகத்தில் ரஞ்சித் குமார் பத்திரப்பதிவு வட்டார அலுவலர் காஞ்சனாவிடம் லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமாக காஞ்சனாவை இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :