ஏழைக் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள்!
பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சிரமங்களைத் தணிப்பதற்கு இது உதவும் என முடிவு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் நபா் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம், 79.88 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தத் திட்டப்படி 80 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்படும். இவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,332.92 கோடி செலவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :