குரு ரவிதாஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை

by Admin / 17-01-2022 11:48:55am
குரு ரவிதாஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை

பஞ்சாப் தேர்தலை ஒத்திவைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதுகுறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலானது வருகிற பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தேர்தலை ஒத்திவைக்கும்படி  அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் குருரவிதாஸின் பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகளவில் வாரணாசி செல்லக்கூடும் என்பதால், தேர்தலை 6 நாட்களுக்கு பின் நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இதையே ஆதரித்து பா.ஜ.க., பஞ்சாப் லோக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. 

இந்த நிலையில் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையம் அதிகாரிகள் இன்று கூடி ஆலோசிக்க உள்ளதாகவும், தேர்தல் இறுதி தேதி தொடர்பான தகவல் மதியம் வெளியாகலாம் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via