மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
மராட்டிய மாநிலம் மும்பையின் டார்டியோவில் உள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் உள்ள 20 மாடிகள் கொண்ட கமலா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 7.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கவும் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாநில அரசு சார்பில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags :