ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் பலி !

சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அவருக்கு வயது 72 ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன். ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை முகப்பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தப்போதும் அவை பலன் அளிக்காமல், சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் காலமானார் . இவரது மறைவுக்கு அmரசு உயரதிகாரிகள், அரசியல் தலைவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கு குறித்து மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகத்தை ராகோத்தமன் எழுதியுள்ளார்
Tags :