சசிகலாவை சந்தித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.ஓ.ராஜா

by Admin / 06-03-2022 09:00:01am
சசிகலாவை சந்தித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.ஓ.ராஜா


அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்..எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக  விடுத்த அறிக்கையில் கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்ததின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டகாரணத்தினாலும் தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஒ.ராஜா,தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன்,மீனவர் பிரிவு கருப்புஜி,கூடலூர்நகர புரட்சித்தலைவிசெயலர் சேதுபதி ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் .கழக உடன் பிறப்புகள் இவர்களுடனி எந்தவித தொடர்பும் வைத்துக்  கொள்ளக்கூடாதுஎனக்கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

Tags :

Share via