ரத்தமும் கண்ணீரும் ஆறாக ஓடுகிறது போப் பிரான்சிஸ் வேதனை
நேட்டோ நாடுகளுடன் இணையும் உக்ரைனின் விருப்பத்துக்கு எதிராக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.
இதற்கு அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்ததோடு பொருளாதார தடைகளையும் விதித்து அனைத்து வகையிலும் ரஷ்யா தனிமைப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் ரத்தமும் கண்ணீரும் ஆறாக ஓடுவதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை உடனடியாக நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது மரணம் அழிவு மற்றும் வறுமையைக் கொண்டுவரும் என்றும் உக்ரைனுக்கு மனிதாபிமான தேவைகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags :