நடிகர் ரஜினிக்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த முத்துமணி மரணம்
45 ஆண்டுகளுக்குமுன்னர் கே.பாலசந்தரால் திரைத்துறைக்கு அழைத்துவரப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்க்கு தமிழ்நாடு மட்டுமல்ல உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.ரஜினிகாந்த்தின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ஜப்பான் ரசிகர்கள் படம் பார்க்க தமிழகம் வந்துவிடுவார்கள். இப்படிஅவருக்கு பல்வேறு நாடுகளில் வெறித்தனமான ரசிகர்கள் இருந்தாலும்இவர்களையெல்லாம் தாண்டி சூப்பர் ஸ்டாருக்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் மதுரையைச் சேர்ந்த ஏ.பி.முத்துமணி என்பவர்தான்.
மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்துள்ளார். இவரது திருமணமும் நடிகர் ரஜினிகாந்த்தின் தலைமையில்தான் நடந்தது.
கடந்த 2 அண்டுக்ளுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த ஏ.பி. முத்துமணிக்கு நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த முத்துமணி, சிகிச்சை பலனின்றி 8ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 63. அவரது மறைவு செய்தி கேட்டு ரஜினி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Muthumani death, the first fan forum for actor Rajini