சட்டசபை காங்., தலைவர் பதவிக்கு விஜயதாரணி உள்பட 3 பேர் போட்டி
தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நாளை நடக்கிறது. ஓட்டெடுப்பு வாயிலாக, சட்டபை கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற, எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
தமிழக காங்கிரஸ் சார்பில், 18 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். சட்டசபையில்சிறப்பாக செயல்படக் கூடிய எம்.எல். ஏ.,வை, சட்டசபை தலைவராக தேர்வு செய்ய, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, சமீபத்தில் நடந்த சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்தில், விஜயதாரணி, முனிரத்தினம் பங்கேற்றனர். இதில், விஜயதாரணி மட்டும் பேசினார். அவர், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலராக உள்ளார்.
பத்தாண்டுகளாக சட்டசபை கொறடாகவும் இருந்துள்ளார். இவரைப்போல செல்வப்பெருந்தகைஎஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவராகவும் உள்ளார்.தலித் சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அவரும்கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் பதவி வகித்த ராஜேஷ்குமார் ஆகியோரும் இப்பதவிக்கு போட்டி போடதுடித்து வருகின்றனர்.
Tags :