சென்னையில் உள்ள ரேஷன் கடையில் ரூ.7.36 லட்சம் கொள்ளை

by Editor / 17-05-2021 02:05:46pm
சென்னையில் உள்ள  ரேஷன் கடையில்  ரூ.7.36 லட்சம் கொள்ளை

சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 15ஆம் தேதியிலிருந்து முதல் தவணையாக ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 7.36 லட்சம் பணம் கொள்ளைபோனதாக ரேஷன்கடை சூப்பர்வைசர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் முதல்கட்ட விசாரணையை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via