ஏப்ரல் 1 முதல் மருந்துகள் விலை 10.8 சதவீதம் உயர்வு
ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்படும் இன்றியமையாத மருந்துகளின் விலை 10.8 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட உள்ளது.
வலி நிவாரணிகள் இதய நோய்களுக்கான மருந்துகள் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விலையை 10.8 விழுக்காடு அளவுக்கு உயர்த்திக் கொள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் 850 வகையான மருந்துகளின் விலை உயரும் என மனிதர்கள் தெரிவித்துள்ளனர் இதற்கு முன் 2020ஆம் ஆண்டில் ஒரு ஆண்டில் 1.88 விழுக்காடு 2021 ஆம் ஆண்டில் அரை விழுக்காடு மட்டுமே மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டது இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டில் 10 விழுக்காடு உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
Tags :