விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்: சகோதரர் ஆஜராக கோர்ட் உத்தரவு

by Editor / 30-04-2022 12:03:59am
விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்: சகோதரர் ஆஜராக கோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நடுக்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், விக்னேஷின் சகோதரர் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராக சென்னை எழும்பூர் 2வது நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார். விசாரணை கைதி விக்னேஷ் மரண விவகாரத்தில் ரூ.1 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via