ரயில் தண்டவாளத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது நாட்டு வெடிகுண்டு
புதுச்சேரி ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு வெடித்தது அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்பாதையில் வெடிக்காத நாட்டு வெடிகுண்டு வைத்து இருந்ததை கண்டறிந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :