அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 11 பேர் பரிதாப பலி

by Staff / 13-05-2022 03:21:15pm
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு  கவிழ்ந்து விபத்து 11 பேர் பரிதாப பலி

ஹைடியில் இருந்து  அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.ஹைடி  நாட்டில் வறுமையும் வன்முறையும் அதிகரித்ததால் ஏராளமானோர்  அமெரிக்காவில் தஞ்சம் அடைய ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு பியூர்டோ ரிகோ தீவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்ததில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் இதுவரை 37 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via