14 மாவட்டங்களில்,மழை பெய்யக்கூடும்

by Admin / 25-05-2022 03:31:13pm
14 மாவட்டங்களில்,மழை பெய்யக்கூடும்

 இன்று 14 மாவட்டங்களில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி- வெப்பச்சலனம் காரணமாக, கனமழை பெய்யலாம் என்று சென்னைமண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு- புதுவை, காரைக்கால்  பகுதிகளில்  ஒருசில இடங்களில்  இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர்,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி,  தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.என்றும்.மே 26அன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால்  பகுதிகளில்சில  இடங்களில்  இடியு டன் கூடிய  லேசான    மழை பெய்யக்கூடும்.   வேலூர்,   திருப்பத்தூர்,      ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,  சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை,  திருப்பூர்  மற்றும் திண்டுக்கல்  மாவட்டங்களில் சில  இடங்களில்  கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது

 

Tags :

Share via