ஜவுளிக்கடை அதிபரைக்கடத்தி..அவரது மனைவியிடம் நகை ....கொள்ளை.

by Editor / 02-12-2022 10:40:41pm
ஜவுளிக்கடை அதிபரைக்கடத்தி..அவரது மனைவியிடம் நகை ....கொள்ளை.

குமாரபாளையத்தை அடுத்த மேட்டுக்கடையைச் சேர்ந்த சத்தியசுந்தரம் என்பவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி இரவு, கடையைப் பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர், அவரை காரில் கடத்திச் சென்றனர்.

பின்னர், சத்தியசுந்தரத்தை அவரது மனைவியிடம் தொலைபேசியில் பேச வைத்து, வீட்டுக்கு வரும் நபரிடம் நகைகளைக் கொடுத்து அனுப்புமாறு மிரட்டியுள்ளனர். அதன்படி, சத்தியசுந்திரத்தின் மனைவியும் வீட்டுக்கு வந்த நபரிடம் 18 பவுன் நகைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். பின்னர், நகையைப் பெற்றுக் கொண்ட அவர்கள், சத்தியசுந்தரத்தை விடுவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் மிரட்டிச் சென்றதால், வெளியே சொல்லாமல் சத்தியசுந்தரம் இருந்துள்ளார். ஆயினும் நண்பர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதால் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பெல்ட் குமார் என்கிற குமார், ராஜன், சலீம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பூமிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via