சென்னையில் மேலும் ஒரு பள்ளியில் ஆசிரியர் மீது பாலியல் புகார்

by Editor / 28-05-2021 11:07:13am
சென்னையில் மேலும் ஒரு பள்ளியில் ஆசிரியர் மீது பாலியல் புகார்

சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர். மாணவிகள் அளித்த புகாரை அடுத்து ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக நெறிப்படுத்த வேண்டும்.இதுபோன்ற புகார்கள் வந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததன் அடிப்படையில் தொடர்ந்து பள்ளி நிர்வாகமும், காவல்துறை, மாவட்ட குழந்தைகள் நலத்துறை என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆனந்தன் என்ற ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து அந்த பள்ளியில் இருக்கும் குழு ஒன்று விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில் மாணவி குறித்த புகார் உண்மை என தெரியவந்ததால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

Tags :

Share via