சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை

by Editor / 24-06-2022 12:41:00pm
சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு  லாரியை  வழிமறித்த காட்டு யானை

 சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று கரும்பு லாரி வழிமறித்தது. தளவாடியில்  இருந்து புறப்பட்டு சென்ற அந்த லாரியை கரப்பள்ளம்  சோதனைச்சாவடி அருகே வழிமறித்து காட்டு யானை தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புகளை ருசி பார்க்க தொடங்கியது. சற்று நேரத்திற்குப்பின் யானை வனப் பகுதிக்கு சென்றதால் அங்கு அணிவகுத்து இருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டனர்.இதனால் அந்த பகுதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

 

Tags :

Share via