.அ.தி.மு.க.விற்குள் எல்லாமே திடீர் திடிரென நிகழ்வதால் பொறுத்திருந்தே அதன் நகர்வுகளை கவனிப்போம்.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்குப் பின்னர் இரண்டு அணிகளும் அடுத்தடுத்த காய்களை நகர்த்துவதற்கானமுயற்சியில் முனைப்பு காட்டி வருகின்றன. டெல்லி விரைந்த ஈ.பி.எஸ்...,கட்சி வழக்கறிஞர் குழுவுடன் ஈ.பி.எஸ் பசுமை வெளிச்சாலையிலுள்ள வீட்டி ல்தீவிர ஆலோசனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர்.சி.வி.சண்முகம் ஈ.பி.எஸ்.அணியின்ஒற்றைக்குரலால் ஒலித்துக் கொண்டிருக்கிறார். ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிஇன்றோடு காலாவதி ஆகிவிட்டதாலும் அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் செல்லாது என்றும்பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டும் தான் .இணை ஒருங்கிணைப்பாளர் அமைப்பு செயலாளர் தான்.அவைத்தலைவர்தான் இனி அதிகாரம் படைத்தவர் என்ற கருத்தையும் முன் வைத்தவர் வரும் ஜீலை 11 ஆம் தேதி பொதுக்குழு கண்டிப்பாகக்கூடும் என்றும் பொதுக்குழுவில் ஐந்தில் ஒரு பங்கினர் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றலாம் என்றார்.ஒ.பி.எஸ்.தரப்பு வைத்தியலிங்கம் சட்டத்திற்கு புறம்பாக நடந்த பொதுக்குழு என்றதோடு பொதுக்குழுவைக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து அவசியம் . .23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் அவைத்தலைவர் தீர்மானத்தில் இல்லாமல் ஒருவரைத் தேர்வு செய்வது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றார். ஜெ.டி.சி பிரபாகர் ஒருங்கிணைப்பாளருக்கு உரிய மரியாதை தராமல் அவமதிப்பு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்.எப்படியே ...இரு தரப்பும் தங்களுக்கான வியூகங்களை வகுக்கத்தொடங்கி விட்டன.இதற்கிடையே ..சசிகலா தமிழ்நாடு முழுவதும் சூறாவாளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.அ.தி.மு.க என்ன மாதிரியான விளைவுகாளச்சந்திக்கப்போகிறது. என்பது புரியாத புதிராக உள்ளது .தனக்குத்தான் கட்சியின் பெரும்பான்மை தொண்டர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகச்சொவ்லும் ஈ.பி.எஸ் தரப்புக்கு இது பணம் செலவளித்து உருவாக்கப்பட்ட போலி இமேஜ் தானே தவிர உண்மையான செல்வாக்கு இல்லைஎன்று எதிர்தரப்பிலிருந்து எழும் குற்றச்சாட்டு ஒன்னரைக்கோடிக்கு மேல் தொண்டர்கள் உடைய உண்மையான குரல் எப்பொழுது ஒங்கி ஒலிக்கப்போகீறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென்று சொல்லும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து உள்ளது.அ.தி.மு.க.விற்குள் எல்லாமே திடீர் திடிரென நிகழ்வதால் பொறுத்திருந்தே அதன் நகர்வுகளை கவனிப்போம்.
Tags :