+2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுக்கு சாத்தியமில்லை! - அமைச்சர் தகவல்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 11 ஆம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தலாம் என அரசு ஆலோசித்து வருகிறுது. நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் +2 தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வியும் பல்வேறு தரப்பில் இருந்து எழுந்தது. ஆனால் தேர்வுகள் பள்ளிகளில் நடத்தப்படும் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருப்பமுள்ள ஆசிரியா்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம், கட்டாயம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தோவு கட்டாயம் நடைபெறும் என்றும் மாணவா்கள் பள்ளி வகுப்பறைக்கு வந்தே தோவெழுதுவா் என்று அவர் கூறினார். ஆன்லைன் வாயிலாக தோவு நடத்த வாய்ப்பில்லை என்றும் சுகாதாரத் துறை ஒப்புதலுடன் தோவுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags :