அதிகரிக்கும் கொரோனா மீண்டும் ஊரடங்கு ..?

by Editor / 02-07-2022 09:22:41pm
 அதிகரிக்கும் கொரோனா  மீண்டும் ஊரடங்கு ..?

இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 17 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது. இந்நிலையில் இன்று 17 ஆயிரத்து 92 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 87 ஆயிரத்து 326 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 2,385- ஆக உயர்ந்த நிலையில் இன்றைய பாதிப்பு 2,500 ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 13,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 1,059 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை. ஏற்கனவே தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன.இந்நிலையில் தமிழ்காத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஆனாலும் மக்களிடம் இன்னும் போதிய தடுப்பு நடவடிக்கை முன்னேற்பாடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 அதிகரிக்கும் கொரோனா  மீண்டும் ஊரடங்கு ..?
 

Tags : Increasing corona curfew again ..?

Share via