குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

by Admin / 09-08-2022 09:14:08pm
குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபலமான நீர்வீழச்சியான குற்றாலத்தில் ,கடந்த சில நாட்களாக பெய்து  வந்த  கன மழை காரணமாக குற்றால அருவிகளில்   வெள்ளப்பெருக்கு  அதிகரித்த காரணத்தினால்  சுற்றுலா பயணிகள்  குளிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டிருந்தது. அருவிகளில் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மாவட்ட நிர்வாகம் குற்றால  அருவிகளில்   குளிப்பதற்கு விதிக்கப்பட்ட  தடையை  விலக்கியது. அதனால், விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள்
மகிழ்ச்சியடைந்தனர்.
 

Tags :

Share via