பேருந்துக்காக நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த 2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார்

by Editor / 14-08-2022 03:52:59pm
பேருந்துக்காக நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த 2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேருந்துக்காக நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் 14ஆம் தேதி அப்பட்டுவிலை பகுதியில் 60 வயது மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தக்கலையில் வாகன சோதனையில் இருவர் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர் .இந்த இருவரும் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்து  3 சவரன் நகைகள் மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via