பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

by Editor / 28-07-2021 08:46:05am
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த பேரறிவாளன், ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வந்தாா்.

ஜூன் 28-ம் தேதியுடன் பரோல் முடிந்த நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுவதாக தமிழக கூடுதல் தலைமை செயலாளா் எஸ்.கே.பிரபாகரன் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரோலில் வந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உள்ளார்.

 

Tags :

Share via